
சென்னை: சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வடமாநில இளைஞரை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மதின் மொல்லா (33). சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 15-ம் தேதி காலை புது வண்ணாரப்பேட்டை வஉசி நகர் மார்க்கெட் மெயின் ரோடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்