
செங்கரும்பை அரசே நேரடியாக கொள்முதல் செய்து, அதற்கான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரும்பு விவசாயிகளிடம் இருந்து பொங்கல் சிறப்பு தொகுப்பாக, செங்கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் விவசாயிகளிடம் தமிழக அரசே நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து, சேர வேண்டிய தொகையையும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்