
அரசு நிதியில் முறைகேடு செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளராகவும், பாலக்கோடு தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருப்பவர் கே.பி.அன்பழகன். கடந்த அதிமுக ஆட்சியின்போது உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்