
சென்னை: தமிழகத்துக்கு மழை நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கோரப்பட்ட ரூ.6,230.45 கோடியை விரைவாக விடுவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது குறித்து தங்களுக்கு நினைவூட்டுகிறேன். நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.6230.45 கோடி நிதியுதவி கோரி தமிழக அரசால் மூன்று முறை கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்