
முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னையில் 2010-ம் ஆண்டில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைத் திறந்து வைத்தார். அனைத்து வசதிகளுடன் அமைந்த இந்த நூலகத்துக்கு ஆசியக் கண்டத்தில் இரண்டாவது மிகப் பெரிய நூலகம் என்ற பெருமை உண்டு. அதேநேரத்தில் தெற் காசியாவில் முதல் நூலகம் என்ற பெயரையும் தட்டிச் சென்றது.
அதுபோன்ற நூலகம் தங் கள் பகுதியில் அமையாதது தென்மாவட்ட மக்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிய ஏக் கமாக இருந்தது. அதைத் தீர்த்து வைக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் முத் தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க 2021 ஜூன் 3-ல் உத்தரவிட்டு பின்னர் அடிக்கல் நாட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்