
சென்னை: வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்குவதற்காக தமிழகஅரசு செலுத்திய ரூ.68 கோடி டெபாசிட் தொகையை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரி வித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசுஉத்தரவிட்டது. அதற்கு ஏதுவாக சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ.68கோடியை டெபாசிட் செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்