
குன்னூர்: அடர்வனத்தைக் கொண்டிருக்கும் நீலகிரி மாவட்டம் பல்வேறு வகையான வன உயிர்களின் புகலிடமாக இருந்து வருகிறது. இந்த அடர்வனத்தின் இடையே ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே 14 கொண்டை ஊசி வளைவுகளுடன் வாகனங்கள் செல்ல பாதை அமைக்கப்பட்டது.
யானைகளின் முக்கியமான வாழிடமாக இருந்து வரும் இந்தப் பகுதிக்கு, கெத்தை - கல்லார் வழித்தடத்தைப் பயன்படுத்தும் யானைக் கூட்டங்கள் வறட்சிக் காலங்களிலும், பலா காய்க்கும் பருவங்களிலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும். அவ்விதம் வரும் யானைகள் இங்கு வந்து குட்டிகளுடன் சில காலம் முகாமிட்டு திரும்பிச் செல்வது வழக்கம். அது மட்டுமின்றி, இதே வனத்தில் நிரந்தரமாக உலவும் சில யானைக் கூட்டங்களும் உண்டு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்