
சென்னை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தேசிய அறிவியல் திருவிழா கொண்டாடப்படும் என்று மத்திய அரசின் விக்யான் பிரச்சார் அமைப்பு அறிவித்துள்ளது.
சர். சி.வி.ராமன் தனது புகழ்மிக்க ‘ராமன் விளைவு’ குறித்து 1928-ம் ஆண்டு பிப்.28-ம் தேதி உலகுக்கு அறிவித்தார். அவரது இந்த கண்டுபிடிப்புக்கு 1930-ம் ஆண்டில் நோபல்பரிசு வழங்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பிப்.28-ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்