
75 சதவீத மானியத்தில் ரூ.1.5 கோடியில் கால்நடை மற்றும் கன்றுக ளுக்கு தீவனம் தரும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அப்போது முதல்வரிடம் பல்வேறு புகார்களை பெண்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலம் 75 சதவீத மானியத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியா ளர் சங்கத்தில் உறுப்பினர் அல் லாத கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கால்நடை தீவனம் மற்றும் கன்று தீவனம் நடப்பாண் டிற்கு வழங்கும் திட்ட தொடக்க விழா சண்முகாபுரத்தில் நேற்று நடந்தது. கால்நடை நலத்துறை இயக்குநர் செல்வராஜ் வரவேற்றார். அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமைதாங்கினார். அரசு கொறடா ஆறு முகம், ரமேஷ் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு கால் நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்