
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் வேட்பாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிராக திமுக பெண் வேட்பாளர் எதிர்த்து போட்டியிட்டதில் வெற்றி அடைந்தார். கூட்டணி தர்மத்தை மீறியதாக காங்கிரஸ் கட்சியினர் திமுகவுக்கு எதிராக, பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 1, அதிமுக 3, சுயேச்சைகள் 4, பாமக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. பெரும்புதூர் பேரூராட்சித் தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்