
நாகப்பட்டினம்: நல்லாட்சி நடைபெறும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களுக்கு தமிழக அரசு துரோகம் செய்துவிடக் கூடாது. தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நாகை அவுரித்திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளரும் எம்.பியுமான செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் பேசியது: தமிழகத்தில் மதச் சார்பற்ற நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்