
அனைத்து சட்ட உரிமைகளும் கிடைத்த பிறகும் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்க இடையூறாக உள்ள கேரளாவின் சதிச் செயலை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
பெரியாறு அணை உரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தி 6 மாவட்ட பாசன விவசாய சங்கத்தினர் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்து பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்