
கடலூர் பகுதி கடலில் வனத்துறை சார்பில் 900 ஆமைக் குஞ்சுகள் விடப்பட்டன.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள், கரையோரம் மணல் பகுதிக்கு வந்து முட்டைகள் இட்டுச் செல்லும். ஆமைகள் கரை நோக்கி வரும்போது அவை மீன் பிடி படகுகளில் அடிபட்டும், வலைகளில் சிக்கியும் அதிக அளவில் இறக்க நேருகிறது. இந்த ஆமைகளை பாதுகாக்க தமிழக கடலோர பாதுகாப்புப்படை, வனத்துறை மற்றும் மீன்வளத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்