
புதுச்சேரி கடற்கரையையொட்டி ரூ.13 கோடியில் நட்சத்திர அந்தஸ்துடன் கட்டப்பட்டு வரும் கலாச்சார மையம், அதில் விழாக்கள் நடத்தும் அரங்கம், கடல் அழகை ரசிக்கும் வகையில் அறைகள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு மாதங்களில் இப்பணி நிறைவடையும் என்று முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார்.
புதுச்சேரி கடற்கரை சாலையின் இறுதியில் அரசின் சாராய வடி ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை வில்லியனூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் கால் நூற்றாண்டாக இயங்காமல் இருந்தது. இதனால் அந்த இடம் மோசமடைந்து காணப்பட்டது. இதையடுத்து அரசு சார்பில் சுற்றுலா மேம்பாட்டுக்காக அப்பகுதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்