
சென்னை: மாணவர் சேர்க்கை மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை கல்லூரி இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஏஐசிடிஇ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்ட அறிவிப்பு: கல்வி நிறுவனங்களின் செயல்பாடு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தொடர்பான விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக ஏஐசிடிஇ-யிடம் கோரப்படுகிறது. இதனால், ஏஐசிடிஇ பணிச்சுமை அதிகரிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்