
சென்னை: சிறிய மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கான பதிவுக் கட்டணத்தை ரூ.5,000-ல் இருந்து ரூ.1,000 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பாரா மெடிக்கல் லேப் கல்விமற்றும் நலச் சங்கத்தின் சார்பில்,தரக் கட்டுப்பாடு நிர்ணயம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் தலைமைவகித்தார். சிறப்பு அழைப்பாளராக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்