
அரசு சித்திரைப் பொருட்சியை மாட்டுத்தாவணிக்கு மாற்றக்கூடாது என்றும், தமுக்கம் மைதானத்தில் போதுமான இடம் உள்ளதால் அங்கேயே நடத்த வேண்டும் என்றும் அதிமுக மாநகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை சித்திரைத் திருவிழாவில் அரசு துறை சார்பில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் முக்கிய திட்டங்களை விளக்கும் வகையிலும் ஆண்டுதோறும் சித்திரைப்பொருட்காட்சி தமுக்கம் மைதானத்தில் நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்