
கல்வராயன்மலையில் உள்ள கீழ்வலசை, மேல்வலசை கிரா மங்களில் பெருங்கற்கால நினைவு சின்னங்கள், கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக தி.மலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பழனிசாமி தலைமையிலான குழுவினர் கூறும்போது, ‘‘தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே கல்வராயன்மலையில் உள்ள கீழ்வலசை, மேல்வலசை, அக் கரைப்பட்டி கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டோம். கீழ் வலசை கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ள இடத்தில் பல்வேறு காலங்களைச் சேர்ந்த சிலைகள், நடுகற்கள், சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய பலகைகற்கள் கண்டெடுக்கப்பட்டன. 5 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு, மனிதர்கள் பயன்படுத்திய 5 கற்கருவிகளை மக்கள் வணங்குகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்