
சென்னை: அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தால் போக்குவரத்துக்கழகத்தை நடத்த முடியாது என்றும்,ரூ.48 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘‘பேருந்தில் இலவச பயணம் என்றதும் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், குறிப்பிட்ட பேருந்துகள் என்றதும் குறித்த நேரத்தில் பணிக்கு செல்லமுடியாமல் அவர்கள் மீண்டும் ‘ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பெண்கள் குரலாக நான் ஒலிக்கிறேன். மாநகர பேருந்துகளில் அனைத்து பேருந்துகளிலும் பயணம் என்றில்லாமல், குறிப்பிட்டபேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு அனுமதிக்கப்படுகிறது’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்