
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது பரோலில் உள்ள நளினிக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுகவேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை சார்பாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்