
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் இயங்கும் கரித்தொட்டி ஆலை மீது வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க, உடுமலை வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உடுமலையில் வட்டாட்சியர் கு.கணேசன் தலைமையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. காவல் துணைக் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளர் சதீஷ்குமார், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், விவேகானந்தன், விஜயசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்