
சென்னை: சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள அவ்வையார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநரின் செயலர் ஆனந்தராவ் வி.பாட்டீல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழக அரசு சார்பில் காமராஜர்சாலையில் உள்ள அவ்வையார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அமைச்சர்கள் பி.கீதாஜீவன், என்.கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்