
திருவண்ணாமலையில் ரூ.38 கோடியில் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்று கடந்த 2 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா சாலை – திண்டிவனம் சாலையை இணைக் கும் வகையில் ரூ.38.74 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. 666 மீட்டர் நீளம் மற்றும் 30 தூண்களை கொண்டது. ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்தாண்டு டிசம்பர் மாதம் நிறைவு பெற்றது. பின்னர், அண்ணா சாலை மார்க்கத்தில் உள்ள சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்