
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், "எல்லா தரப்பினரும் பாராட்டும் வகையில் நிதிநிலை அறிக்கைகள் அமைந்துள்ளன. அதனால் எதிர்க்கட்சியினரும் விமர்சனம் செய்ய முடியவில்லை.
தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களில் 3,000 பேர் பெண்கள். எனவே, கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். மாநிலத்தில் சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்" என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்