
சென்னை: சிறந்த நூல்களே மனித வாழ்வை நல்வழிப்படுத்தும் என்று சென்னை புத்தகக் காட்சி நிறைவு விழாவில் நீதிபதி அரங்க மகாதேவன் கருத்து தெரிவித்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 45-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த பிப்.16-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. நிறைவு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்த 25 பேருக்கு சிறப்பு விருதுகளை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்