
சென்னை: பருவத்தேர்வில் மாணவர்கள் தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள்களும் நிச்சயம் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு இணைய வழியில் கடந்த பிப்.22 முதல் மார்ச் 12-ம்தேதி வரை நடத்தப்பட்டது. விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்