
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின சிறப்பு சிலம்பாட்ட பயிற்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி டிஎஸ்பி விஜயராகவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பள்ளி மாணவிகள் அனைவருக்கும் இது போன்ற தற்காப்புக் கலைகள் தேவை. இதுமட்டுமின்றி தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களையும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்