Sunday, March 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/21/large/779860.jpgஒப்பிலியப்பன் கோயில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில்108 திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்தது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இக்கோயிலில் இந்த ஆண்டு பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடாழ்வார் படம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. கொடிமரம் அருகே உற்சவரான எண்ணப்பன் சுவாமி பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...