
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கவுன்சிலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்து, கவுன்சிலர்களுக்கான பயிற்சிக் கையேட்டை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
கவுன்சிலர்கள் சரியாகச் செயல்பட்டால், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களை விட சிறப்பான மரியாதையை மக்கள் தருவார்கள். கவுன்சிலர்கள் சிறப்பாகச் செயல்பட நிதி தேவை. தேவையான நிதியைக் கொண்டுவந்து சேர்ப்பது எங்கள் கடமை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்