
சென்னை: டெல்லி, மும்பை, பெங்களூருவைத் தொடர்ந்து, தமிழகத்தில் வணிக வழக்குகளுக்கான முதல் நீதிமன்றத்தை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (ஏப். 23) திறந்துவைக்கிறார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 9 அடுக்குமாடிகள் கொண்ட நிர்வாக அலுவலகக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டிவைக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்துவைக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்