
சென்னை: தமிழக கோயில்களில் இருந்து திருடி புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள 600 ஆண்டுகள் பழமையான 3 உலோக சுவாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களில் இருந்து திருடப்பட்ட புராதன சிலைகள் புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவுப்படி, ஐ.ஜி தினகரன் வழிகாட்டுதலில், கூடுதல் கண்காணிப்பாளர் அசோக் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீஸார் புதுச்சேரி விரைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்