
சென்னை: மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையம் உள்ளது. இங்குள்ள 'நம்ம சென்னை' சின்னத்தின் மீது இளைஞர்கள் சிலர் ஏறி அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், சில இளைஞர்கள் அந்த சின்னத்தின் மீது மனதில் தோன்றியதை எல்லாம் எழுதி வைத்து அதை பாழ்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி நிர்வாகம், அந்த சின்னத்தை தூய்மை செய்து, மீண்டும் வண்ணம் தீட்டி புதுப்பித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்