
சென்னை: இன்று ‘சுபகிருது’ தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழ் புத்தாண்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாட்காட்டியின் ‘சித்திரை’ மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இத்தினம், நம் வாழ்வில் செழிப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் செழுமையான பாரம்பரியத்தின் மகத்துவம் கொண்ட இந்த விழா, நமது பணிகளை நோக்கிய புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. மற்றும் ஒருசிறந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது கடமைகளை நினைவூட்டுகிறது. அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்