
தூத்துக்குடி / நாகர்கோவில்: தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நாளை மறுநாள் (ஏப்.15) முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி, கன்னியாகுமரி நகரம் வரையான கிழக்கு கடற்கரைப் பகுதியில், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்