
கும்பகோணம்: கொலை வழக்கில் கூலிப்படை தலைவனுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று முக்கிய தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் சென்னியமங்கலத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் மகன் செந்தில்நாதன் (35). இவர், அருகில் உள்ள திப்பிராஜபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (எ) கட்டை ராஜா (43). இவர் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர், கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டு வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்