
சென்னை: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவர்கள் வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்தப்படுவர் என்றும், மதிப்பூதியம் ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘அதிமுக அரசு கொண்டு வந்த அம்மா மினி கிளினிக்கை திமுக அரசு முடக்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நெடுந்தொலைவு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்