
சென்னை: கோயில்களில் பக்தர்களுக்கான சேவை கட்டணச் சீட்டுகள் வரும் 11-ம் தேதி முதல் மின்னணு முறையில் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித் துள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோயில்களில் வாடகைதாரர்கள், குத்தகைதாரர்களுக்கு கேட்பு வசூல்ரசீது பல்வேறு நிலைகளில் வழங்கப்பட்டு வந்தது. அதை தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ஒரேசீராகவும், வெளிப்படைத் தன்மையுடனும் வழங்கும் வகையில் மின்னணு முறையில் கட்டணச் சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்