
கரூர்: பாலியல் தொல்லைக்கு ஆளான தனது அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்திய பரதநாட்டிய கலைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் எஸ்.பி-யிடம் அரசு இசைப் பள்ளி ஆசிரியை நேற்று புகார் அளித்தார்.
கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு கடந்த பிப்.28-ம் தேதி ஆய்வுக்காக வந்த கலையியல் அறிவுரைஞரும், பரதநாட்டிய கலைஞருமான ஜாகிர் உசேன், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கலை பண்பாட்டுத் துறை இயக்குநரிடம் அங்கு பணியாற்றும் பரதநாட்டிய ஆசிரியை அண்மையில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக, கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன் ஏப்.4-ம் தேதி ஆசிரியையிடம் விசாரணை நடத்தி, ஆட்சியரிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்