
சென்னை: இந்தி திணிப்பு குறித்து மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்த பேச்சுக்கு தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு மீண்டும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயக்குநர் தங்கர் பச்சான் 'தமிழ்தான் எங்கள் உயிர்' என்கிற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கவனம் ஈர்த்துள்ள அந்த அறிக்கையில், "இந்தித் திணிப்பின் போது இணையத்தளங்களில் மட்டும் தான் தமிழர்கள் தங்களின் தமிழ்ப்பற்றினை பறை சாற்றிக்கொள்வோம். தமிழில் கல்வி வேண்டாம், ஆலயங்களில் தமிழ் வேண்டாம், நீதி மன்றங்களில் தமிழ் வேண்டாம், திருமண அழைப்பிதழ்களில் தமிழ் வேண்டாம், நாளேடுகளில் தமிழ் வேண்டாம், வீட்டுக்குள்ளேயே தமிழ் வேண்டாம், பொது இடங்களில் தமிழ் வேண்டாம், கடைகள், வணிக நிறுவனங்கள் என எங்கும் எதிலும் தமிழ் வேண்டாம். ஆனால் தமிழ் தான் எங்கள் உயிர் என கூறிக்கொள்வோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்