
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸார் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை தொடர்கிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016-ல் காலமானார். அவருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்தனர். இதை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்