
சென்னை: சென்னை ஐஐடியில் 12 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியாவில் கரோனா தொற்று 2020 பிப்ரவரியில் பரவத் தொடங்கியது. தமிழகத்தில் அதே ஆண்டு மார்ச் மாதத்தில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. 3 அலைகளாக தொற்று பரவிய நிலையில், 2-வது அலையில் பாதிப்பு அதிகம் இருந்தது. மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதால், 3-வது அலையான ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், உயிரிழப்பு குறைவாகவே இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்