
சென்னை: முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே.7-ம் தேதி வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில், முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக்காக 3 பேர் அடங்கிய கண்காணிப்புக் குழுவை மத்திய நீர்வளத் துறை அமைத்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு அந்த கண்காணிப்புக் குழுவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அணை மேலாண்மைக்காக, 2 தொழில்நுட்ப வல்லுநர்களை தமிழகம் மற்றும் கேரளா சார்பில் சேர்க்கும்படி அறிவுறுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்