
வேலூர் பேருந்து நிலையம் பகுதியில் ஹாரன் எழுப்பிய பிரச்சினையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை, ஓட்டல் உரிமையாளர்கள் தாக்கினர். இதனை கண்டித்து, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் சாலையின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாலை மாவட்டம் பெரிய அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (49). அரசுப் பேருந்து ஓட்டுநர். இவர், அம்பத்தூரில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் பேருந்தின் ஓட்டுநராக நேற்று இருந்தார். இந்த பேருந்து வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று பகல் வந்தது. அப்போது, பேருந்து நிலையம் அருகில் அதிக பேருந்துகள் தொடர்ந்து இருந்ததால் ஓட்டுநர் செல்வம் தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்