
சென்னை: கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை ஒடுக்குவதில் காவல் துறைஎவ்வித பாரபட்சமும் காட்டக் கூடாது. சட்டம்-ஒழுங்கு, பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், திமுகவினர் சிலர் எல்லை மீறி வருவதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 10 மாதங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்