
சென்னை: இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியது. நேரடியாக பிரதமரை சந்தித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி கோரினார். ஆனால், சாதகமான பதில் வராத சூழலில், அனுமதி அளிக்க மத்திய அரசை வலியறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானநகலுடன் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்