
விழுப்புரம் - காட்பாடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவையை துண்டித்துவிட்டு, வரும் 23-ம் தேதி முதல் விரைவு ரயிலை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் - திருப்பதி இடையே 2 பயணிகள் ரயில்கள், விழுப்புரம் - காட்பாடி இடையே ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தன. 3 பயணிகள் ரயில் சேவை, கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுத்தப்பப்பட்டன. பின்னர், இயக்கப்படவில்லை. கரோனா அலைகள் ஓய்ந்த பிறகும், 2 ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ள பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்