
சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று விழுப்புரம் நோக்கி வந்தது.அந்தப் பேருந்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெருமாள்(54) நடத்துநராக பணிபுரிந்து வந்தார்.இந்த பேருந்து மதுராந்தகம் புறவழிச் சாலையில் பயணிகளை இறக்கிவிட நின்றது. பயணிகள் இறங்கும்போது அங்கு போதையில் நின்றிருந்த சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன் (34) என்பவர் இந்தப் பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்தில் ஏறிய முருகன் ஆரம்பம் முதலே பயணச் சீட்டு வாங்காமல் இருந்துள்ளார். நடத்துநர் பெருமாள் திரும்ப திரும்ப பயணச் சீட்டு குறித்து கேட்டபோது சூனாம்பேடு செல்வதற்கு பயணச் சீட்டு வேண்டும் என்று முருகன் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்