
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவித்திறன் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டவரின் மூளைக்கு அருகே இருந்த கட்டி மூன்று நாட்கள் நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் கரைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (35). இவரின் வலது காது உட்புறத்துக்கும் மூளைக்கும் இடையே உள்ள நரம்பில் ஏற்பட்ட கட்டியால் செவித்திறன் பாதிப்பால் 6 மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை நரம்பியல் துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். கட்டியின் அளவும் சிறியதாக இருந்ததாலும், மூளைக்கு அருகே கட்டி இருந்ததாலும், அவர் கதீர்வீச்சு சிகிச்சை துறைக்கு மாற்றப்பட்டார். அத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்