
சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் குப்பையை வகை பிரித்து வழங்குவது தொடர்பாகவும் அவ்வாறு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதன் பின்னரே அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.
மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாள்தோறும் தூய்மைப் பணியாளர்களால் வீடு வீடாக குப்பை சேகரிக்கப்படுகிறது. ஒரு சில வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை என முறையாக வகை பிரித்து வழங்கப்படுகின்றன. சில வீடுகளில் அவ்வாறு குப்பைகள் வகை பிரித்து வழங்கப்படுவது இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்