
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது. 2004-ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு பின்னர் அந்த சிலை மாயமானது. அதற்குப் பதிலாக, பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது.
“இது ஆகம விதிகளுக்கு எதிரானது. புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கெனவே இருந்தசிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு தொடர்ந்து நடக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்